குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அதற்கடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு வர தாமதமாகி வந்தது. அதற்கு காரணம் அவரது அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் தான். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜும், ராதிகாவும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் இது.. தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராதிகா. மேலும் சத்யராஜுடன் நடிப்பது என்றால் எப்போதுமே ஜாலியான உரையாடலும் சந்தோசமுமாக இருக்கும், புதுவருடத்தை இப்படி துவங்குவதும் ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ராதிகா.