இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தியாவில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சத்யராஜ், திரிஷா, மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, விஷ்ணு விஷால், ஸ்வரா பாஸ்கர் என எல்லா மொழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஷோபனா ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
தளபதி, இது நம்ம ஆளு உள்ளிட்ட தமிழில் ஏராளமான படங்களிலும், தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ள இவர் நடிப்போடு நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார். நடன பள்ளியும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதில் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல்வலி, குளிர் நடுக்கம் போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் இந்த வகை வைரஸில் இருந்து 85 பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று இந்த ஒமைக்ரான் உடன் முடிவுக்கு வர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.