ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ஷோபனா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் வெகுவாக கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த சந்தோஷத்தில் இருந்த ஷோபனாவுக்கு தற்போது அவரது சிறு வயது தோழியான அனிதாவின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் ஷோபனா குடிபுகுந்த போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும் கூட இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஷோபனா சினிமாவில் பிசியான காலகட்டத்தில் கூட அனிதாவுடன் நட்பை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அனிதா மேனன் மறைந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஷோபனாவுக்கு ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா, அனிதா மேனனுக்கு தன்னுடைய இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.