தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு என்றாலும் இந்த வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜனவரி 7ம் தேதியன்று மூன்று புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகியது.
இந்த வாரம் பொங்கல் வாரம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' வெளிவராததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13ம் தேதி, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, மருத, நாய்சேகர்” ஆகிய படங்களும், ஜனவரி 14ம் தேதி 'எஜிபி, பாசக்காரப் பய, தேள்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தது.
தினசரி 3 காட்சிகள் ஓடினால் கூட போதும், போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படங்களை வெளியிடுகிறார்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்தே இவற்றின் வசூலும் அமையும்.