ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சாதகமாக உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழக முதல்வரை பாராட்டியும், கொங்கு மண்டல மக்கள் பயன்பெறுவார்கள் என்பதாக குறிப்பிட்டும் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. இது போலியானது என்று சூர்யாவின் நண்பரும், சூர்யாவின் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரியுமான ராஜசேகர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.