மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் திரைவாழ்க்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடிக்க வருகிறார் சிம்பு. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் ந டித்து வந்தபோது அப்பட நாயகி நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தற்போது அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது போலவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்த சிம்பு சில மாதங்களிலேயே அந்த காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் மூன்றாவதாக நிதி அகர்வாலை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் சிம்புவின் இந்த காதலாவது கைக்கூடி கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று அவரது அபிமானிகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.