தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த இரண்டு அலைகளின் போதும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக துவங்கியுள்ள மூன்றாவது அலையில் கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் வருமுன் காப்போம் என்கிற நடவடிக்கையிலும் சிலர் இறங்கியுள்ளனர். நடிகை மாளவிகா மோகனன், தான் அந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை தனது சமூகவலைதளம் மூலம் உறுதி செய்துள்ளார். இஞ்சி மற்றும் புளி கலந்த தேனீர் தான் இந்த மாதம் முழுவதும் தான் குடிக்க போவதாக கூறியுள்ள மாளவிகா மோகனன், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என நம்புகிறார்.