தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பாடு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகளி்ல் பங்கேற்க முடியாமல் திரும்பினார். இது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் பிரதமருக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் பிரபல இறகுபந்து வீராங்கனை சாய்னா நேவால், "பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த தேசமும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீதான கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சித்தார்த். அவரின் பாலினம் குறித்து அவதூறான வார்த்தைகளை பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்தியாவுக்காக விளையாடி பெருமை சேர்த்த ஒரு வீராங்கனையை பாலினம் குறிபிட்டு கொச்சைபடுத்துவதா என்ற விமர்சனம் எழுந்தது.
இதை தொடர்ந்து இந்திய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் இந்தியாவின் பெருமைக்குரிய வீராங்கனை சாய்னாவை பாலினம் குறிப்பிட்டு விமர்சித்த நடிகர் சித்தார்த்தின் சமூகவலைதள கணக்கை முடக்க வேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையி்ல் சித்தார்த் தான் ஒரு உண்மையை வெளிப்படுத்த முயற்சித்ததாகவும் யாரையும் அவதூறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.