பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
கொரோனா பரவல் ஒமிக்ரான் வடிவில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பல சினிமா பிரபலங்கள் இந்த அலையில் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். புத்தாண்டைக் கொண்டாட லண்டன் சென்றிருந்த போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரவியது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா வந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் த்ரிஷா. கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
“ரிப்போர்ட்டில் 'நெகட்டிவ்' என படிக்கும் போது, இதை விட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி. 2022, இப்போது உனக்காக நான் ரெடி,” என செல்பியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த 2022ம் ஆண்டு வெளிவர உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தர வாய்ப்புள்ளது.