பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேபி. தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் கதாநாயகியாக இருக்கிறார். சிறந்த நடன கலைஞராக இருக்கும் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேபியுடன் கமெண்டில் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கேபி, 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று விசிட் செய்யும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.
அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான கேபி, 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.