ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.