தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை படங்களை தொடர்ந்து சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை ஒட்டி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், தனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்திருக்கிறார்.
அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதோடு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தான் நன்றி செலுத்துவதாகவும், இந்த பொங்கல் நன்னாளில் மாடித்தோட்டத்தில் மஞ்சளை அறுவடை செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.