குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்கள் விஜய், அஜித் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள். இருவரது ரசிகர்களுக்குள்ளும்தான் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடக்கும்.
இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி 8 வருடங்களாகிவிட்டது. 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றன. அதற்குப் பிறகு இருவரது படங்களும் மோதிக் கொள்ளவில்லை.
அஜித் நடித்த 'வலிமை' படம் கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா அலை காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாத வெளியீடு என திட்டமிடப்பட்டுத்தான் வேலைகள் நடந்து வந்தது. 'வலிமை' படத்தின் அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த கொரோனா அலைக்குத் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவில்தான் வருகிறார்கள். மக்களை மீண்டும் வரவழைக்க 'வலிமை, பீஸ்ட்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும், அல்லது ஒரே நாளில் வெளியாக வேண்டும் என திரையுலகில் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வருட அலையின் போது 'மாஸ்டர்' படம் வெளிவந்துதான் திரையுலகத்தை மீட்டுக் கொடுத்தது. இந்த வருட அலைக்குப் பிறகு 'வலிமை, பீஸ்ட்' வந்துதான் திரையுலகை மீட்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்பது சரியானதுதான். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களும் ஒரே நாளில் படத்தை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அடுத்தடுத்து வந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.