இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் -1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்சினி. நள தமயந்தி, பவர் பாண்டி உட்பட பல படங்களில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி, தற்போது ஜோஸ்வா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல மெசேஜ்களை சொல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார். அதோடு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நான் நடித்த வேடத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும்.
அதை உங்களைப் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான பிரபலத்தை வைத்து சொன்னால் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும் என்று சொல்லியே நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். அது என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதனால் அது போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.