கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

பாலிவுட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த துரந்தர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படம் பத்தே நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூலித்து இந்த வருட இறுதியில் பாலிவுட் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே துரந்தர் போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது பயங்கரமான ஒன்றுதான். அது மட்டுமல்ல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக மூன்று மாதங்கள் நம்மை காத்திருக்க சொல்கிறார்கள். எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். முன்கூட்டியே இதன் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வெளியாகும் என்பது உறுதியாகிறது.




