பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரஜினி மகள் ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவன் மனைவி இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.
விவாவகரத்து பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இருவருமே அவரவர் பணியில் பிசியாக இருக்கிறார்கள். தனுஷ் பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது ஒரு காதல் இசை ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்
இதற்காக தனது குழுவினருடன் ஐதராபாத்தில் தங்கி உள்ள ஐஸ்வர்யா அங்குள்ள 7 நட்சத்திர ஒட்டலில் தனது குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது. வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷூம் ஐதராபாத்தில் தான் உள்ளார். இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.