ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜீவா நடித்த சீறு படத்தின் மூலம் அறிமுகமானவர் ரியா சுமன். தற்போது அவர் சந்தானம் ஜோடியாக ஏஜெணட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என்ன மாதிரியான படம் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதை போட்டு உடைத்தார் ரியா சுமன். நடித்து முடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம், நடிக்க உள்ள மன்மத லீலை குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான இந்த இரண்டு படங்களிலும் ஒரு பகுதியாக இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா என்னை அணுகியபோது, கதையை கூறிவிட்டு தெலுங்கு படத்தை பார்க்க சொன்னார்.
அதை பார்க்க நான் விரும்பவில்லை ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை. படப்பிடிப்பை முடித்த பிறகு, அசல் பதிப்பை பார்த்த போது, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும், நான் நடித்த கதாபாத்திரத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தமிழுக்காக அந்த பாத்திரம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்து நடிக்கும் மன்மத லீலை கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்கால கதையில் நான் நடிக்கிறேன். இதற்குமேல் படம் பற்றியும், எனது கேரக்டர் பற்றியும் விரிவாக கூற இயலாது. என்றார்.