ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா' படம் மியூசிக்கலாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படத்தின் பாடல்கள் போல ஹிட்டானது. இப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'ஸ்ரீவள்ளி…' பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பாடியது ஸ்ரீராம்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'புஷ்பா' நாயகன் அல்லு அர்ஜுன் திடீரென 'புஷ்பா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை சித் ஸ்ரீராம் பாடிய வீடியோவைப் பகிர்ந்து பெரிதும் பாராட்டியுள்ளார்.
“ஓய்வாக இருக்கும் போது இதை எழுத வேண்டும் என்றிருந்தேன். எனது சகோதரர் சித் ஸ்ரீராம் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடினார். எந்த இசையும் இல்லாமல் பாடி ஆரம்பித்தார். அவரது குரலுக்கு ஆதரவாக இசைக் கருவிகள் மெதுவாக வரும் என காத்திருந்தேன், ஆனால், வரவில்லை. எந்த இசையும் இல்லாமல் அவர் பாடினார். அவரது குரலில் அடித்துச் செல்லப்பட்டேன். எனது தலையில் ஏதோ ஒரு மேஜிக்கல் நிகழ்கிறது என நினைத்தேன். அவருக்கு இசை தேவையில்லை…..அவர்தான் இசை,” எனப் பாராட்டியுள்ளார்.