தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமான ஜனனி அய்யரை அடையாளம் காட்டியது பாலா இயக்கிய 'அவன் இவன்'. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பின்பு மலையாளத்துக்கு சென்றார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர் அதே கண்கள், பலூன் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விதி மதி உல்டா படத்தில் நடித்தார் . இந்த படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
ஜனனி நடித்துள்ள கசட தபற, தொல்லைக்காட்சி, வேஷம், பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் சில படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. சில பாதியில் நிற்கிறது. இந்த நிலையில கூர்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறர்.
பிரையன் பி ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில் ராஜாஜி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்க, சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு த்ரில்லர் வகை படமாகும்.