ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா டான்டன், பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோலார் தங்க வயலின் பழங்கால பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாக பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளி போடப்பட்டது. தற்போது வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். படத்தின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு அனிகுடே ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.