ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'மகாநடி' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 8 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. விஜய்யுடன் நடித்த 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'குட் லக் சகி' படம் கூட தோல்வியடைந்தது.
தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அவற்றோடு ,“எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை, கேமரா இருந்தால் மட்டுமே…” என கருத்தும் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்கள் என்றாலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'சாணி காயிதம்' விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. மலையாளத்திலும் 'வாஷி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.