தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அந்த குரு விசுவாசத்தின் பேரில் கவுதம் மேனனையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மனு ஆனந்த்.
கவுதம் மேனனுடன் பணியாற்றிய எட்டு வருடங்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மனு ஆனந்த்திற்கு கிடைத்தது.. அந்த சமயத்தில் அஜித் அவ்வப்போது சொன்ன ஆலோசனைகளும் அறிவுரைகளும் இந்த எப்ஐஆர் பட உருவாக்கத்தின்போது ரொம்பவே பயன்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..
அஜித் படத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள மனு ஆனந்த், இப்போதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை.. அவர் மீது நடிகராகவும் தனிப்பட முறையிலும் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஒருவேளை அவரது படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக எனக்கு இருக்கும் என கூறியுள்ளார் மனு ஆனந்த்.