ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம், தனது காதலரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது காதலர் தினத்தை பொள்ளாச்சியில் ஒரு சாதாரண சாலையோர உணவகத்தில் கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவரின் மேல் தனது கால்களை போட்டபடி அன்யோன்யமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள காஜல் அகர்வால், 'இந்த அழகனை அவரது பிழைகள் பொறுத்து 2012லிருந்து காதலித்து வருகிறேன்.. ஹேப்பி காதலர் தினம்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகளின் காதல் எதோ ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே மீடியாவில் கசிந்து விடும்.. நயன்தாரா, சமந்தா, அமலாபால் ஆகியோரின் காதல் விஷயம் எல்லாம் அப்படி உடனே வெளியானவை தான்.. ஆனால் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, அதாவது தனது திருமண அறிவிப்பை வெளியிடும் வரை தனது காதல் குறித்த ரகசியத்தை காஜல் அகர்வால் கட்டிக்காத்து வந்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.