படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஆயிரத்தி நானூறு படங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் இளையராஜா. தற்போது பியூட்டிபுல் பிரேக்அப் என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைக்கிறார். அவரது பாடலை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. தனது சகோதரர் கங்கை அமரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் இளையராஜாவுக்கு நடந்து வருகிறது.
இந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட பாடல்களோடு இளையராஜாவின் இசை ஆல்பங்களும் உலக புகழ்பெற்றவை. பாடல் இல்லாமல் இசை கருவிகளைக் கொண்டு அவர் இசை அமைத்த ஆல்பங்கள் பல வெற்றி பெற்றிருக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'ஹவ் டூ நேம் இட்' ஆல்பம். வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட 10 இசைக்கருவிகளை முதன்மையாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாகியிருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக இளையராஜா அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள் பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என வருவதை பார்க்கிறோம் இல்லையா?, உதாரணமாக சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக வந்து போகுது. இதேபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாது அப்படினு ஒரு யோசனை எனக்கு வந்தது. அதனால், உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஹவ் டூ நேம் இட் இரண்டாம் பாகம் சீக்கிரமே வரவிருக்கிறது. என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.