மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் இதே நாளில் பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கிளைமாக்சில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசவே' அவர்தான் கதாநாயகி. தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் சமந்தா ஏற்று நடித்திருந்தார். தெலுங்கில் முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியையும், நல்லதொரு அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான படம் 'மாஸ்கோவின் காவிரி'. சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'ஏ மாயா சேசவே' அவருடைய முதல் கதாநாயகிப் படமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் பல வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் பட கதாநாயகனாக நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் அவரை விட்டுப் பிரிந்தார்.
திரையுலகில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள குறித்து சமந்தா, “திரையுலகிற்குள் வந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிறது. லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என 12 வருட காலமாக இருக்கும் ஈடு இணையில்லா தருணம் இது. உலகின் சிறப்பான, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என சமூக வலைத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.