தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடித்தவருமான நடிகர் விஷ்ணு மஞ்சு வீட்டில் விலை உயர்ந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் சாதன பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று திருடு போனது. இதுகுறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஷ்ணு மஞ்சு.
அதேசமயம் இந்தப்பொருள் திருடு போனது தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து தான் என்று ஒரு தகவலும் கிளம்பியது. ஆனால் இதை மறுத்துள்ள போலீசார் திருட்டு நிகழ்ந்தது நடிகர் விஷ்ணு மஞ்சுவின் வீட்டில் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் இந்த திருட்டு நடந்த பின்னர் ஹேர் டிரஸர் நாக ஸ்ரீனு என்பவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.