தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த 40 வருடமாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அவரும் பத்து வருடங்களை கடந்து விட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் தந்தை-மகன் இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகும் சூழல் வந்தபோது ஏதோ ஒரு தயாரிப்பாளர் விட்டுக்கொடுத்து கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் முதன்முறையாக மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரது படங்களும் இன்று (மார்ச் 3) ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழில் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா என்கிற படத்தில் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த பீஷ்ம பருவம் படமும் வெளியாகி உள்ளது. இரண்டுமே மலையாளத்தில் உருவாகி இருந்தால் நிச்சயம் அங்குள்ள தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி இரண்டு படங்களுக்கும் இடைஞ்சல் வராமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பார்கள். ஆனால் இங்கே துல்கர் படம் தமிழிலும், மம்முட்டி படம் மலையாளத்திலும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் வசூல் ரீதியாக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே தெரிகிறது.