இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா துறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் என்ற அமைப்பும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படபிடிப்பு தளங்களுக்கு சென்று ரெய்டு என்கிற பெயரில் பணி வாய்ப்பை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.பாபு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இரு சங்க நிர்வாகிளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் முடிவில் ஒரு சங்க உறுப்பினர்களின் பணியை மற்றொரு சங்கத்தினர் தடுக்கவோ, இடையூறு செய்யவோ கூடாது என இரு சங்கத்திடமும் கடிதம் பெறப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.