பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் |
நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியிருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு முன்பு எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும், வாடி பொட்ட புள்ள வெளியே உள்ளிட்ட சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கும் வடிவேலு இதுபோன்று டிராப் சாங் பாடியதில்லை. முதன்முறையாக ஒரு புதிய முயற்சியை இந்தப் படத்தில் அவர் எடுத்துள்ளார். இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.