தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'பாகுபலி, சாஹோ' படங்களை அடுத்து பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் நாளை மறுதினம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வெளியிட்டு உரிமை 105 கோடி, வெளிநாடு உரிமை 24 கோடி, வட இந்தியா உரிமை 40 கோடி, கர்நாடகா உரிமை 17 கோடி, தமிழ்நாடு உரிமை 10 கோடி, கேரளா உரிமை 4 கோடி என மொத்தமாக 200 கோடி வரையில் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இப்படத்தின் 5 மொழி ஓடிடி உரிமையையும் முன்னணி ஓடிடி தளம் ஒன்று 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர், ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே 550 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது என்கிறார்கள்.
பிரபாஸின் முந்தைய படங்களான 'சாஹோ, பாகுபலி 2, பாகுலி 1' ஆகிய படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது போல இந்தப் படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' வசூலை மிஞ்சினால்தான் பிரபாஸின் அடுத்தடுத்த பான்--இந்தியா படங்களுக்கும் வியாபாரம் இன்னும் அதிகம் நடக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.