'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

வெள்ளித்திரையில் அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமானாலும் கூட, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி உடன் பயணித்த அவரது தோழி மரணம் அடைந்தார்.. காலில் அடிபட்ட யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வழக்கம்போல தனது வேலைகளை கவனித்து வருகிறார்..
அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களின் கேள்விகளுக்கு தவறாமல் பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு ரசிகர் உங்களிடம் இருந்த ஊதா நிற புல்லட் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த யாஷிகா, “அந்த பைக் வீட்டில் தான் இருக்கிறது. எனது அண்ணன் இப்போது அதை உபயோகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான தகவல்.. இனிமேல் நான் கார் மற்றும் பைக் ஓட்ட போவது இல்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.
அதற்கு ரசிகர்கள் சிலர் எதற்காக இந்த அதிர்ச்சி முடிவு என்று கேட்டதற்கு, “என் தோழியை நான்தான் கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.. அதனால்தான் இந்த முடிவு” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.