தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் தேங்க்யூ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டவர், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். இதில் நாகசைதன்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது..
இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்ரம் குமார் உடன் நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு ரசிகையாக பார்வதியுடன் பிரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது.