தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றத்தை நிறுவிய மதுரை ஏ.பி.முத்துமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி உயிரிழந்தார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தொலைபேசியில் முத்துமணியின் மனைவியை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வரமுடியவில்லை எனவும் விரைவில் உங்கள் குடும்பத்தை சந்திக்கிறேன். கவலை படாதீர்கள் எனவும் கூறியுள்ளார் . இந்த தொலைபேசி ஆடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .