திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த இரண்டாயிரத்து பதினெட்டில் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது பிறந்தநாள் அன்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் கவுதம் கார்த்திக் கூறிய வாழ்த்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக மஞ்சிமா மோகனை அவர் மோமோ என குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார். ‛இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற அதிலேயே பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னை போன்ற ஒருவர் இருப்பதுதான்' என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் கவுதம் கார்த்திக் மஞ்சிமா உடனான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.