புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகி அதன்பின் பல படங்களில் நடித்த பரத் இப்போது 50வது படத்தை எட்டி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பல படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இயக்கி இயக்குனராக அறிமுகமாவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் கலந்த பேமிலி டிராமா படமாக உருவாகிறது. முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரத், வாணிபோஜன், இயக்குனர் ஆர்.பி.பாலா, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.