'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் சந்திரா தங்கராஜ். அமீர், வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இயக்கிய கள்ளன் என்ற படம் நேற்று வெளியானது. இந்த படம் குறிப்பிட்ட ஜாதியை திருடர்களாக சித்தரிப்பதாக கூறி தென் மாவட்டங்களில் பல இடங்களில் படத்தை திரையிட விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து சந்திரா தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தேன். அதை புரிந்து கொள்ளாமல் ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறார்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாததை.
நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஜாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார் சந்திரா தங்கராஜ். பேட்டியின் போது தயாரிப்பாளர் மதியழகன் உடன் இருந்தார்.