தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கேரள சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக அவரை வீரப்பெண்மணி என பலரும் பாராட்டினார்கள். பாவனாவின் பெயரை கூறியதும் அரங்கத்தில் இருந்தோர் எழுந்து நின்று ஒருநிமிடம் வரை கைதட்டல் செய்து தங்களது ஆதரவை அவருக்கு தெரியப்படுத்தினர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடிகை பாவனாவுக்கு அவரது வாழ்வில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடி வருகிறார். அதேசமயம் கடந்த நான்கு வருடங்களில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத பாவனா அரசு அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த வருகையை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.