துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கன்னடத் திரையுகத்தின் முக்கியமான சினிமா குடும்பம் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம். அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார். நேற்று கர்நாடக மாநிலம், சிக்பலப்பூர் நகரில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் துக்கமாகவும் இருக்கிறது. அப்பு (புனித்) மறைவின் துக்கத்தில் இருக்கிறோம். நான் ராஜமவுலியின் பெரிய ரசிகர். ஜுனியர் என்டிஆர், ராம்சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். படங்களை எனக்கு வீட்டில் பார்ப்பது பிடிக்காது, தியேட்டர்களில்தான் பார்ப்பேன். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்று பேசினார்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய மேலும் சில நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.