தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கன்னடத் திரையுகத்தின் முக்கியமான சினிமா குடும்பம் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம். அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார். நேற்று கர்நாடக மாநிலம், சிக்பலப்பூர் நகரில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் துக்கமாகவும் இருக்கிறது. அப்பு (புனித்) மறைவின் துக்கத்தில் இருக்கிறோம். நான் ராஜமவுலியின் பெரிய ரசிகர். ஜுனியர் என்டிஆர், ராம்சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். படங்களை எனக்கு வீட்டில் பார்ப்பது பிடிக்காது, தியேட்டர்களில்தான் பார்ப்பேன். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்று பேசினார்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய மேலும் சில நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.