ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டது. 50 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் நிதி பற்றாக்குறை. நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் தயாரித்து அதன் மூலம் நிதிச் சுமையை சமாளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நின்றது. இதற்கிடையில் அடுத்து வந்த தேர்தல், அதன் பிறகு நடந்த வழக்குகள் என நடிகர் சங்க நிர்வாகம் தனி அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் தடுமாறியது.
நடிகர் சங்க அறக்கட்டளை தவிர மற்ற நிர்வாகத் தேவைக்கு நிதி இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் கடந்த 2 வருடங்களாக நன்கொடை இல்லை. சந்தா இல்லை. இதனால் பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது நடிகர் சங்கம். இந்த நிலையில் தற்போது பொருளாளராக மீண்டும் தேர்வு பெற்றிருக்கும் கார்த்தி இதுகுறித்து கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-2019 காலகட்டம் வரலாற்றில் முக்கியமான ஆண்டுகள். நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். அதனால் உறுப்பினர்கள் பயனடைந்தார்கள். நடிகர் சங்க கட்டிடம் உருவானது. அது எங்க டீமோட அயராத உழைப்பு. அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் தடைபட்டு போச்சு. அது ரொம்ப வருத்தமான விஷயம்.
இப்போது கிடைத்திருக்கும் வெற்றி முக்கியமானது. 2 வருட சட்டபோராட்டத்துக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றி. இப்போது எங்களுக்கு 3 ஆண்டுகள் கிடைத்திருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம். நடிகர் சங்கத்தில் நிதி நெருக்கடி இருப்பது உண்மைதான். அதனை ஒவ்வொன்றாக சமாளித்து விட்ட பணிகள் அனைத்தையும் செய்து முடிப்போம். விரைவில் சங்க நிர்வாகிகள் அனைவரும் முதல்வரை சந்திப்போம். என்றார்.