ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு பயணி என்ற ஒரு வீடியோ ஆல்பத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினி. இந்த நிலையில் தற்போது அவர் தனது மகன்களான லிங்கா, யாத்ரா ஆகிய இருவரும் தனக்கு அன்பு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதோடு, நேற்று உலக கவிதை நாள் என்பதால் ஒரு கவிதையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில், ‛‛என் வயிற்றில் இருக்கும்போது என்னை உதைத்தாய்... இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை ரசிக்கிறேன். அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை ஒன்று மட்டுமே. உங்களது ஒவ்வொரு வளர்ச்சிகளையும் பொக்கிஷமாக பார்ப்பேன்'' என தெரிவித்துள்ளார்.