கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் |
தெலுங்கு, தமிழ் இரண்டிலும் கதாநாயகியாக நடித்து வரும் ரெஜினா விரைவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் சானா கஸ்டம் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுக்கு என இதுபோன்று குத்து பாடல்கள் இல்லாமல் ரெஜினாவுக்கு மட்டுமே அது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் தான் ஒரு பாட்டுக்கு ஆடியது இதுதான் முதலும் கடைசியும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு பாட்டுக்கு ஆடுவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒருவரை தவிர, நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது கூட, சிரஞ்சீவியுடன் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாட்டுக்காவது ஆடி விட வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்து இருந்தேன். காரணம் அது என் பாக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஆசைகளில் ஒன்று. அதற்கேற்றார் போல் ஆச்சார்யா படத்தில் வாய்ப்பு வந்ததும் எந்த மறுபேச்சும் பேசாமல் ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வேறு இனிய அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் அவருடன் சேர்ந்து ஆடிய பின் இதுவே ஒரு பாடலுக்கு ஆடுவது முதலும் கடைசியுமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.