பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

தெலுங்கு, தமிழ் இரண்டிலும் கதாநாயகியாக நடித்து வரும் ரெஜினா விரைவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் சானா கஸ்டம் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுக்கு என இதுபோன்று குத்து பாடல்கள் இல்லாமல் ரெஜினாவுக்கு மட்டுமே அது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் தான் ஒரு பாட்டுக்கு ஆடியது இதுதான் முதலும் கடைசியும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு பாட்டுக்கு ஆடுவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒருவரை தவிர, நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது கூட, சிரஞ்சீவியுடன் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாட்டுக்காவது ஆடி விட வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்து இருந்தேன். காரணம் அது என் பாக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஆசைகளில் ஒன்று. அதற்கேற்றார் போல் ஆச்சார்யா படத்தில் வாய்ப்பு வந்ததும் எந்த மறுபேச்சும் பேசாமல் ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வேறு இனிய அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் அவருடன் சேர்ந்து ஆடிய பின் இதுவே ஒரு பாடலுக்கு ஆடுவது முதலும் கடைசியுமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.