ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கு, தமிழ் இரண்டிலும் கதாநாயகியாக நடித்து வரும் ரெஜினா விரைவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் சானா கஸ்டம் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுக்கு என இதுபோன்று குத்து பாடல்கள் இல்லாமல் ரெஜினாவுக்கு மட்டுமே அது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் தான் ஒரு பாட்டுக்கு ஆடியது இதுதான் முதலும் கடைசியும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு பாட்டுக்கு ஆடுவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒருவரை தவிர, நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது கூட, சிரஞ்சீவியுடன் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாட்டுக்காவது ஆடி விட வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்து இருந்தேன். காரணம் அது என் பாக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஆசைகளில் ஒன்று. அதற்கேற்றார் போல் ஆச்சார்யா படத்தில் வாய்ப்பு வந்ததும் எந்த மறுபேச்சும் பேசாமல் ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வேறு இனிய அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் அவருடன் சேர்ந்து ஆடிய பின் இதுவே ஒரு பாடலுக்கு ஆடுவது முதலும் கடைசியுமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.