இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, சிரஞ்சீவியுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், “சிரஞ்சீவியை எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்.. அந்த அளவுக்கு அன்பான பண்பான நட்பான ஒரு மனிதர்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த 2006-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.