தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, சிரஞ்சீவியுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், “சிரஞ்சீவியை எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்.. அந்த அளவுக்கு அன்பான பண்பான நட்பான ஒரு மனிதர்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த 2006-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.