விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை |
'பான்-இந்தியா' என்ற பரபரப்பு 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பிரபலமானது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ் அதன் மூலம் பான்--இந்தியா ஹீரோவானார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' ஹிந்தியில் மட்டுமே ஓடியது. சமீபத்தில் வெளிவந்த 'ராதேஷ்யாம்' நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்து நான்கைந்து பான்--இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்த 'புஷ்பா' படமும் பான்--இந்தியா படமாக வெளியாகியது. எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் பான்--இந்தியா ஹீரோவானார்.
இப்போது அந்த வரிசையில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது. அப்படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இப்போது பான்--ஹீரோக்கள் ஆகிவிட்டனர்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த பான்--இந்தியா ஹீரோ வரிசையில் காத்திருப்பவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்து வரும் 'லிகர்' படம் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது. அதற்குள் தெலுங்கில் வேறு யாராவது பான்--இந்தியா ஹீரோவாக மாறுவார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ள 'பீஸ்ட்' படம் பான்--இந்தியா படமாக வெளிவருவதால் விஜய், பான்--இந்தியா ஹீரேவாக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏப்ரல் 14ல் வெளியாக உள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' மூலம் தன்னுடைய பான்--இந்தியா அந்தஸ்தை யாஷ் இன்னும் உயர்த்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.