லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் நடிகர்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது சினிமா உலகினர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சில நடிகைகள் அவரை தொடர்புகொண்டு அவருடன் மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமாத்துறையினர் குறித்த சர்ச்சை செய்திகளை அவர் வெளியிட்டு வருவதால் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் குறித்த அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா? இல்லை இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதற்கு அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.