இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் முதல் நாளிலிருநதே நல்ல வசூலைப் பெற்றது. முதல் வார இறுதி முடிவில் உலக அளவில் இப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஐந்து மொழிகளிலும் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருப்பதாக அந்தந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானோ அச்சம் முழுமையாக விலகாத சூழ்நிலையிலும் இந்தப் படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மூன்று 500 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 1' படத்தின் மொத்த வசூல் 700 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 1800 கோடியாகவும் இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' 500 கோடி வசூலை மூன்றே நாட்களில் கடந்துள்ள நிலையில் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.