'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.. சமீபகாலமாக கருத்து கூறுவதை குறைத்துக் கொண்டு மீண்டும் படம் இயக்குவதில் பிசியாக இறங்கியுள்ளார். பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த ராம்கோபால் வர்மா அடுத்ததாக கன்னடத்தில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆர் என ஒற்றை எழுத்தில் டைட்டிலும் வைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற இவர், இந்தப்படத்தையும் அதே ஜானரில் தான் இயக்குகிறார். உபேந்திராவின் கதாபாத்திரம் பற்றி கூறும்போது, “யாருக்கும் பயப்படாத இந்த ஆர் பெங்களூரில் பிறந்து மும்பை சென்று அன்டர்வோர்ல்ட் தாதாவாக மாறியவன்.. தாவூத் இப்ராஹீம் கூட தானாகவே ஆர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். அதுமட்டுமல்ல, துபாயில் உள்ள டி கம்பெனிக்கு பல உதவிகளை செய்தவன் தான் இந்த ஆர்' என குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.