மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.. சமீபகாலமாக கருத்து கூறுவதை குறைத்துக் கொண்டு மீண்டும் படம் இயக்குவதில் பிசியாக இறங்கியுள்ளார். பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த ராம்கோபால் வர்மா அடுத்ததாக கன்னடத்தில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆர் என ஒற்றை எழுத்தில் டைட்டிலும் வைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற இவர், இந்தப்படத்தையும் அதே ஜானரில் தான் இயக்குகிறார். உபேந்திராவின் கதாபாத்திரம் பற்றி கூறும்போது, “யாருக்கும் பயப்படாத இந்த ஆர் பெங்களூரில் பிறந்து மும்பை சென்று அன்டர்வோர்ல்ட் தாதாவாக மாறியவன்.. தாவூத் இப்ராஹீம் கூட தானாகவே ஆர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். அதுமட்டுமல்ல, துபாயில் உள்ள டி கம்பெனிக்கு பல உதவிகளை செய்தவன் தான் இந்த ஆர்' என குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.