படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்டமான இயக்குனர்கள் பெயர் எடுத்தவர்கள் இயக்குனர் ஷங்கரும், ராஜமவுலியும். சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கரே, ராஜமவுலியை 'மகா ராஜமவுலி' என்று பாராட்டியிருந்தார்.. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா என்கிற பான் இந்தியா படத்தை இயக்கிய சுகுமாரும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு தற்போது இயக்குனர் ராஜமவுலி. குறித்த பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் சுகுமார் இதுபற்றி கூறும்போது, “நாங்கள் எல்லோரும் உங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் கூட உங்களை தொடுவதற்கு ஒட வேண்டியிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஆகாயத்தில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடியே உங்களை அண்ணாந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “புஷ்பா படத்தை நான் பான் இந்தியா படமாக உருவாக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராஜமவுலி அதை திட்டமிட்டே பான் இந்தியா படமாக உருவாக்கியுள்ளார். அவருக்கும் எங்களுக்கும் ஒரே வித்தியாசம் தான் இருக்கிறது. அவர் இதுபோன்ற பிரமாண்ட படைப்புகளை உருவாக்குவார் எங்களால் அவற்றை பார்க்க மட்டும் தான் முடியும்” என்று கூறியுள்ளார்