வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான பழம்பெரும் நடிகை லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் இப்போது கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இப்போது நிலைமை சரியானதும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது, கதையும் பிடித்திருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரே பிரச்சினையை வெவ்வேறு நபர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இன்னும் உயிரோடு இருப்பதுதான் என்னை நடிக்க வைக்கிறது, நான் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இளைய தலைமுறையிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார்.