ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும், மீதி ரூ.4 கோடியை தரவில்லை. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த கதையை எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன். உண்மை நிலவரம் இப்படியிருக்க, படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடருவது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.