தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஏப்ரல் மாதம் இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் மிக நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள்.
இந்தநிலையில், காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த போது சமந்தாவுக்கு ஒரு அழகிய கம்மல் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வாழ்த்து அட்டையில் அப்படத்தில் சமந்தாவின் கேரக்டரான கதீஜாவை குறிப்பிட்டு டியர் கதிஜா, வித் லவ் கண்மணி என தனது கேரக்டர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா . இதற்கு நன்றி தெரிவித்து உள்ள சமந்தா அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.