ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஏப்ரல் மாதம் இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் மிக நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள்.
இந்தநிலையில், காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த போது சமந்தாவுக்கு ஒரு அழகிய கம்மல் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வாழ்த்து அட்டையில் அப்படத்தில் சமந்தாவின் கேரக்டரான கதீஜாவை குறிப்பிட்டு டியர் கதிஜா, வித் லவ் கண்மணி என தனது கேரக்டர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா . இதற்கு நன்றி தெரிவித்து உள்ள சமந்தா அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.